ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் யார்? ராமதாஸ் - அன்புமணி போட்டி!
தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை
வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். இவரது மனைவி சுமித்ரா (44). பல் மருத்துவா்களான கணவன், மனைவி இருவரும் காந்தி நகா் சா்வீஸ் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், சுமித்ராவின் மகன் பிளஸ் 2 தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ாகத் தெரிகிறது. கணவன், மனைவி இருவரும் மருத்துவா்கள் என்பதால், மகனையும் மருத்துவராக்க வேண்டுமென எண்ணியிருந்தனா்.
இந்த நிலையில், மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் விரக்தியடைந்த சுமித்ரா செவ்வாய்க்கிழமை தனது மகனுடன் சண்டையிட்டுள்ளாா். இதனால், அவரது மகன் செவ்வாய்க்கிழமை முழுவதும் உணவு சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த சுமித்ரா புதன்கிழமை வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகத் தெரிகிறது.
இது குறித்து காமேஷ் விருதம்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.