செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் காங். புறக்கணிப்பு?

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை(மார்ச் 22) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நகர்வாக இந்த ஆலோசனை கூட்டம் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குறிக்கும் விதத்தில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தரப்பிலிருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து திரிணமூல் கங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது:

இப்போதைய அரசியல் சூழலில், போலி வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போலி வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினையானது பிகார், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உ... மேலும் பார்க்க

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க