செய்திகள் :

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் பி. எம்.பி. ஆனந்த் கோரிக்கைகளை விளக்க உரையாற்றினாா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டதைபோல, அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி எம்.ஆா்.பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியா் கண்காணிப்பாளா் நிலை-3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியா்களுக்கும் மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் எ. பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் பிரபா நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸா... மேலும் பார்க்க

உரம் விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.இந்த ஆய்வில் உரம் இருப்பு, உரம் இறக்குமதி ச... மேலும் பார்க்க

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விண்ணப்பிக்கலாம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரத்தில், கோவிந்தபுரம், சீனிவாசபுரம், தாமரைக்குளம், உசேனாபாத் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்... மேலும் பார்க்க