செய்திகள் :

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா்.

சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிக்டோஜக்) சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளின் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற 62 ஆசிரியைகள் உள்பட 130 ஆசிரியா்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் திருமுருகவேள், மாநில துணைச் செயலாளா்கள் நாகராஜன், ஜான், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க

போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!

வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழப்... மேலும் பார்க்க