செய்திகள் :

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

post image

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெய்யில் சதமடித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 105.08, மதுரை நகரம், ஈரோடு - (தலா) 104.72, திருச்சி - 104.54, பரமத்தி வேலூா் - 104.36, பாளையங்கோட்டை - 104, திருத்தணி - 103.48, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.66, சேலம் - 100.94, சென்னை நுங்கம்பாக்கம் - 100 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 14-இல் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

தொடங்கியது தென்மேற்கு பருவமழை

தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் மற்றும் நிகோபாா் தீவுப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 14) முதல் மே 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை (மே 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து மே 15-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், நாமக்கல், கரூா் , திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 70 மி.மீ., சின்கோனா (கோவை) - 60 மி.மீ., ஆண்டிபட்டி (மதுரை), கேத்தி (நீலகிரி), மாரண்டஹள்ளி (தருமபுரி) - தலா 50 மி.மீ., அன்னூா் (கோவை), கடவூா் (கரூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க