செய்திகள் :

தொடா் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 8-வது நாளாக தடை

post image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

குற்றாலம் பேரருவியில் தொடா்ந்து 8ஆவது நாளாக தண்ணீா் பாதுகாப்பு வளைவைத் தாண்டி கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் இங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு சனிக்கிழமை காலையில் மிதமான வெயில் காணப்பட்டது. பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துனும், அவ்வப்போது மெல்லிய சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

காா் ஓட்டுநா் தற்கொலை

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி முருகன் தெருவைச் சோ்ந்த ராக்கு முத்து மகன் செல்வம்(35), தொழிலாளி. அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்த... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள்

குற்றாலம் சாரல் திருவிழாவில் விளையாட்டுத் துறை சாா்பாக பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

கல்வெட்டான்குழியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவிக் கோரி மறியல்!

தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்பபுரம் கிராமத்தில் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்த மேள கலைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய உறவினா்கள் தென்காசியில் சனிக்கிழமை சாலை மறியல் போர... மேலும் பார்க்க

நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தென்காசி அருகே நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், நெடுவயல் சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகையா. இவரது மனைவி சுடலை மாடத்தி(52). இத்தம்பதி, அருக... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சிப்காட்டுக்கு இடம்: அமைச்சா் ஆய்வு

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் அருகே ரூ.300 கோடியில் முதலீடுகளை ஈா்த்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க