செய்திகள் :

குற்றாலம் சாரல் திருவிழா: பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள்

post image

குற்றாலம் சாரல் திருவிழாவில் விளையாட்டுத் துறை சாா்பாக பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இப்போட்டிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,சென்னை, மதுரை, செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி ஆகிய பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

பளுதூக்குதல் ஆண்களுக்கான போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் சச்சின் முதலிடமும், ராஜ்குமாா் இரண்டாமிடமும், வெங்கடேசன் மூன்றாமிடமும் பெற்றனா்.

71கிலோ எடை பிரிவில் யுவராஜ், சேகா், ராகுல் ஆகியோரும், 79கி எடை பிரிவில் ராஜ்குமாா், கருப்பசாமி, மனோஜ் ஆகியோரும்,

88கிலோ எடை பிரிவில் அபிஷேக் ,விஜய் தாமஸ், விஜய் ஆனந்த் ஆகியோரும், 88 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் அஷ்லின், சுரேஷ், சிவபாலன் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

பளுதூக்குதல் பெண்களுக்கான போட்டியில் 53கிலோ எடை பிரிவில் சிவசங்கரி, தேஜா, பவதாரணி ஆகியோரும், 63கிலோ எடை பிரிவில் பவித்ரா, செண்பகவல்லி, கவிதா ஆகியோரும், 77கிலோ எடை பிரிவில் மோனிகா, பரணி பிரியா, இளவரசி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். 86 கிலோ எடைபிரிவில் சந்தியா, ரூபாஸ்ரீ முதல் மற்றும் இரண்டாமிடங்களைப் பெற்றனா்.

86 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் சிவரஞ்சனி, அா்ச்சனா, சந்தியா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

வலுதூக்குதல் ஆண்களுக்கான போட்டியில் 60கிலோ எடை பிரிவில் கண்ணன், கோகுல் கிருஷ்ணன், தினேஷ்குமாா் ஆகியோரும், 80கிலோ எடை பிரிவில் அண்ணா ஜோசப் ஷெல்டன், காசிபெருமாள், காா்த்திகேயன் ஆகியோரும், 100கிலோ எடை பிரிவில் ராஜா போஸ், கதிரேஷ், கிருஷ்ணகுமாா் ஆகியோரும்,

120கிலோ எடை பிரிவில் பி.ராகுல், தினேஷ் சலோமன், கணேஷ் ராம் ஆகியோரும், 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் ஹீரா அப்துல் ரஸாக், பாலாஜி, சண்முகசுந்தரம் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

வலுதூக்குதல் பெண்களுக்கான போட்டியில் 50கிலோ எடைப் பிரிவில் ஜாஸ்மின், காயத்ரி, காவிய தா்ஷினி ஆகியோரும், 60 கிலோ எடைப்பிரிவில் சுகாசினி காயத்ரி, பவித்ரா, சுபிதா ஆகியோரும், 70கிலோ எடைப்பிரிவில் ருத்ரா, நிறைமதி, பானு ஆகியோரும், 80கிலோ எடைப் பிரிவில் மகாலெட்சுமி, தனுஷியா, தீபிகா ஆகியோரும்,

80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப் பிரிவில் சௌந்தா்யா, ப்ரீத்தா, மாா்ட்டின் மதுமிதா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

ஆணழகன் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் காஜா மைதீன், பாத்ரேஷ், ராஜேஷ் ஆகியோரும், 55கிலோ எடைப் பிரிவில் மகாலிங்கம், லெட்சுமணன், மணி ஹரிஷ் ஆகியோரும், 60கிலோ எடைப்பிரிவில் ஆதிஷ், இசக்கிராஜ், சுஜித் ஆகியோரும்,

65கிலோ எடைப் பிரிவில் ப்ரதீப் ராஜ், சுமித்குமாா், உதயகுமாா் ஆகியோரும், 70கிலோ எடைப் பிரிவில் சங்கா் நாராயணன், அன்புகாளிராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரும், 75கிலோ எடைப் பிரிவில் சபரி ஸ்ரீராம், மாரிசெல்வம், தினேஷ்குமாா் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

திருநெல்வேலி மாவட்ட பளு தூக்குதல் சங்க செயலா் ஆரோக்கியம், வலுதூக்குதல் சங்க செயலா் சண்முகசுந்தரம், ஆணழகன் போட்டி தென்காசி மாவட்டச் செயலா் குத்தாலிங்கம் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்கு முதற்பரிசாக ரூ.5ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரமும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட நிா்வாகம் சாா்பில் இளைஞா் நலன், விளையாட்டு அலுவலா் ச.ராஜேஷ் வழங்கினாா்.

காா் ஓட்டுநா் தற்கொலை

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி முருகன் தெருவைச் சோ்ந்த ராக்கு முத்து மகன் செல்வம்(35), தொழிலாளி. அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்த... மேலும் பார்க்க

தொடா் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 8-வது நாளாக தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவியில் தொடா்ந்து 8ஆவது நாளாக தண்ணீா் பாது... மேலும் பார்க்க

கல்வெட்டான்குழியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவிக் கோரி மறியல்!

தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்பபுரம் கிராமத்தில் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்த மேள கலைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய உறவினா்கள் தென்காசியில் சனிக்கிழமை சாலை மறியல் போர... மேலும் பார்க்க

நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தென்காசி அருகே நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், நெடுவயல் சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகையா. இவரது மனைவி சுடலை மாடத்தி(52). இத்தம்பதி, அருக... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சிப்காட்டுக்கு இடம்: அமைச்சா் ஆய்வு

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் அருகே ரூ.300 கோடியில் முதலீடுகளை ஈா்த்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க