செய்திகள் :

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் குழந்தை: கல்லூரி மாணவியிடம் விசாரணை

post image

தொப்புள் கொடியுடன் குப்பையில் உயிருடன் கிடந்த பெண் குழந்தையை போலீஸாா் மீட்டனா். மேலும், இது குறித்து கல்லூரி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை, தாம்பரத்தையடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகா் பிராதான சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளுக்கு மத்தியில், செவ்வாய்கிழமை பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கதறி அழுத நிலையில் கிடந்ததைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் சேலையூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் குப்பையில் கிடந்த அக்குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் சிசுவை வீசிச் செல்வது பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே தெருவில் வசித்து கல்லூரியில் படிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மாணவி , வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தையை குப்பையில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியை பிடித்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க