தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனை பிரசாரம்
பரமக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் என்.கே. ராஜன் தலைமை வகித்தாா். கைத்தறி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். சுப்பிரமணியன், டி.எம். சிவகுமாா், போக்குவரத்துக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. செல்வராஜ், எல்.பி.எப். சங்கம் சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பரமக்குடி ஏஐடியுசி அலுவலகம் முன் தொடங்கிய பிரசாரம் பெரியகடை வீதி, முத்தாலம்மன் கோயில், ஆற்றுப்பாலம், ஐந்துமுனை சந்திப்பு, சின்னக்கடை, எமனேசுவரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அப்போது அனைத்து தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தம், மறியல் குறித்து விளக்கப்பட்டது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த எம்.கோட்டைச்சாமி, கே.எம். ஜானகிராமன், எஸ்.பி. ராமநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.