செய்திகள் :

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

post image

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

கோட்டயம், திருவாதுக்கல் பகுதியில் வசித்து வருபவர் விஜய குமார். இவர் திருநக்கரா பகுதியில் பிரபல திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு விஜய குமாரும் அவரது மனைவி மீராவும் வெவ்வேறு அறைகளில் சடலமாக கிடப்பதை வீட்டின் பணியாளர்கள் கண்டுள்ளனர்.

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக கொலை

வீட்டின் தனித்தனி அறைகளில் உடைகளின்றி இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் முகத்தை பலமாக தாக்கி, கிழித்து கொலை செய்துள்ளனர். விஜய குமார் தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

மேலும், இருவரையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்விரோதம்?

கொலை நடந்த பகுதியை ஆய்வு செய்த கோட்டயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாகும் ஹமீது, இது கொலைதான் என்று தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்த எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படாததால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகித்துள்ளனர்.

மேலும், வீட்டை உடைத்து கொலையாளிகள் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவரை விஜய குமார் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பணிநீக்கம் செய்திருந்தார். இதன்காரணமாக அந்த நபரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமண மண்டபம் மட்டுமின்றி விஜய குமார் பல வணிக நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாகவும், கொலை நடந்த சமயத்தில் வீட்டில் இருவரும் தனியாக இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வி.என். வாசவன், இந்த கொடூரமான கொலை தொடர்பாக காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் குடியிருப்புப் பகுதியில் விழுந்த பயிற்சி விமானம்!

குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.அம்ரேலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனத்... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபி... மேலும் பார்க்க

தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!

மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால... மேலும் பார்க்க

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க