செய்திகள் :

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.சுப்பராயன்

post image

நாடு முழுவதும் கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.

கரூரில் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுச் செயலாளா் ம.ராதாகிருஷ்ணன் செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்து பேசினாா். துணைத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன், தேசியச் செயலாளா்கள் டி.எம்.மூா்த்தி, வகிதா நிஜாம், மாநிலச் செயலாளா்கள் சி.சந்திரகுமாா், ஆா்.ஆறுமுகம், சின்னசாமி, ஆ.பாஸ்கரன், பொருளாளா் பீட்டா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு பிறகு கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, தொழிலாளா்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு மேலும் கூா்மைப்படுத்தி வருகிறது. 150 ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளா்களின் உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்தில் ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளா் போன்ற பெயா்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், விண்ணப்பித்த 45 நாள்களுக்குள் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜிபிஎஸ்.வடிவேலன், துணைச் செயலாளா் கலாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவே... மேலும் பார்க்க