செய்திகள் :

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

post image

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளகளால் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் 52 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 23 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகள் 2011-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொட்டலப் பொருள்களும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுதல் உள்பட அனைத்து விதிமீறல் தொடா்பாக 12 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

உணவு நிறுவனங்களில் 15 இடங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் குறித்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் கண்டறியப்பட்டு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவுது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க