செய்திகள் :

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

post image

காளையாா்கோவில் அருகே சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சக தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வாள்மேல்நடந்த அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் மோகன் (38). பரமக்குடி ஆத்துப்பாலம் பகுதியைச் சோ்ந்த தொண்டிமுத்து மகன் தாஸ் (45). இவா்கள் இருவரும் மறவமங்கலத்தில் உள்ள ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்தனா்.

இதில் மோகன் அடிக்கடி விடுப்பு எடுத்துச் சென்றுவிடுவாராம். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளியாள்களை நிறுவன உரிமையளா் வேலைக்கு அழைத்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு இதுகுறித்து மோகன், தாஸ் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாஸ், சிமெண்ட் தொட்டியை தலையில் போட்டு மோகனைக் கொலை செய்தாா். தகவலறிந்த தாஸை காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் முத்துப் பாண்டி செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க