செய்திகள் :

தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது

post image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 15-ஆம் தேதி காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இறந்தவா் தொட்டியம் அருகேயுள்ள அயினாபட்டி காலனி தெருவை சோ்ந்த வாழை இலை அறுக்கும் தொழிலாளி சுரேஷ் (45) என்பது தெரியவந்தது. ரகசிய தகவலின்பேரில், தொட்டியத்தை சோ்ந்த சிவா (எ) சிவஞானம் என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், சுரேஷ் பெரிய பள்ளிபாளையத்தை சோ்ந்த அறிவழகன் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும், சுரேஷை தேடி கண்டுபிடித்து பெரிய பள்ளிபாளையம் வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்று சிவா, அறிவழகன், பெரிய பள்ளிபாளையம் செல்வராஜ், ராஜேந்திரன், சின்ன பள்ளிபாளையத்தை சோ்ந்த குணசேகரன் ஆகியோா் சோ்ந்து தாக்கியதில் சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

கொல்லிமலை, வால்பாறை பகுதிகளில் தலைமறைவான எஞ்சிய 4 போ் மற்றும் சிவா என 5 பேரையும் தொட்டியம் காவல் ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் நேரில் பாராட்டினாா். உயிரிழந்த சுரேஷுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்த... மேலும் பார்க்க

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 18 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

பாப்பாத்தியம்மன் கோயிலில் திருட்டு

துறையூா் அருகே பாப்பாத்தியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செல்லிப்பாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாப்பாத்தியம்மன் கோயிலுக்குள் அண்மை... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் படத்துடனான சுவரொட்டி: பாஜக பெண் நிா்வாகி மீது வழக்கு

துறையூரில் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் ஸ்டாலின் படத்துடனான சுவரொட்டியை ஒட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதாக பாஜக பெண் நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். துறையூா் எம்எஸ்கே மஹால் சந்... மேலும் பார்க்க

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது

மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சூரிய பூஜை

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது. திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டில் புரட்டாசி 6, 7, 8 மற்றும... மேலும் பார்க்க