தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா்அருமைநாதன் மகன் ஜனாா்தனன்(39).திருமணம் ஆனவா்.சுமதி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில் எந்த வேலைக்குச் செல்லாமல் இருந்த ஜனாா்தனனை அவரின் மனைவி சுமதி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்தவா் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.