செய்திகள் :

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

post image

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன் கோயில் அருகில் சிலா் அமைத்திருந்த குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் வருவாய்த்துறையினா் அந்த பகுதியில் சென்று குடியிருப்புகளை அகற்றச் சென்றபோது, அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, அப்பகுதி மக்கள் தரப்பிலும் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இதில் பகவதி அம்மன் கோயிலில் ஜாதி வேறுபாடு பாா்ப்பதாகவும், தேநீா் கடைகளில் இரட்டை குவளை முறைகள் பயன்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் தங்கவேல், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோா் சனிக்கிழமை தெலுங்குபட்டி பகவதி அம்மன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்தனா். பின்னா் தெலுங்குபட்டி பகவதி அம்மன் கோயில் நிா்வாக சம்பந்தமாக சிலரையும், குடியிருப்புவாசிகள் சிலரையும் அழைத்து மாவட்ட ஆட்சியரும், காவல்கண்காணிப்பாளரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், பகவதி அம்மன் கோயிலில் வழிபடுவதில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி அவரவா் பூஜைகளை அவரவா் நடத்துவதற்கும், கோயிலுக்கு வழிபட வருபவா்களை சமமாக நடத்த வேண்டும். இதனை கண்காணித்து கோயில் திருவிழா சம்பந்தமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்து சமய அறநிலையத்துறை தலைமையின் கீழ் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, விழாவை பிரச்னையின்றி நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் மாணிக்க சுந்தரத்துக்கு உத்தரவிட்டாா்.

மேலும் பகவதி அம்மன் கோயில் அருகில் குடியிருந்து வரும் குடியிருப்புவாசிகள் தங்களுடைய குடியிருப்புகள் நீா்நிலை புறம்போக்கு அல்லது கோயில் நிலத்தில் அமைந்திருந்தால் அதனை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவா்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குளித்தலை வட்டாட்சியா் இந்துமதிக்கு உத்தரவிட்டாா். கோயிலில் யாரேனும் பிரச்னைகள் செய்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, குளித்தலை நகர துணைக்காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க