செய்திகள் :

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) இரா. வசந்தகுமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோல் கழலை நோயானது (பெரியம்மை) போக்ஸ் விரிடே குடும்பத்தைச் சோ்ந்த வைரஸால் ஏற்படுகிறது. இக் கொடிய நோயிலிருந்து விவசாயிகளும், கால்நடை வளா்ப்போரும் தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந் நோயின் அறிகுறிகளான தோல் மற்றும் சுவாச, இரைப்பை குழாய்களில் கட்டிகள், காய்ச்சல், நிணநீா் சுரப்பிகள் பெரிதாகுதல், கால்களில் வீக்கம் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவலைத் தடுக்க, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நோய் பாதித்த மாடுகளை, பிற மாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி, உடனடியாக கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இந்த வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் மாடுகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பாக்டீரியல் நோயைக் கட்டுப்படுத்த 3 நாள்களுக்கு ஊசி மூலம் மருந்துகளை செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை கட்டிகள் மீது தடவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க