செய்திகள் :

நகரிகாத்தான் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!

post image

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சாலையில் நகரிகாத்தான் அருகேயுள்ள தரைப்பாலத்தை அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலத்துக்கு மேல் செல்வதால் வாகனங்கள் செல்ல இயலாமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் ஆரம்பகட்டப் பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், அதற்கான புறவழிச்சாலை அமைக்க சிமெண்ட் உருளைகள் போடப்பட்ட நிலையில் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் துரித நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரையில் சனிக்கிழமை கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், எஸ... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: பணம், நகைகள் எரிந்து சேதம்

திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்... மேலும் பார்க்க

கமுதி தேவா் கல்லூரியில் ஜூலை 9-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு!

கமுதியில் உள்ள தேவா் கல்லூரியில் ஜூலை 9-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு மூலம் 3,935 பணியிடங்க... மேலும் பார்க்க

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க