செய்திகள் :

நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு கரூா் எம்.பி. ஜோதிமணி கண்டனம்

post image

நகைக்கடன் மீதான வங்கிகளின் புதிய நடைமுறைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டம் வாங்கலில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்டத்தின் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போதைய புதிய நடைமுறையின் படி நகைக்கடனுக்குரிய அசலையும், வட்டியையும் செலுத்தி விட்டு பின்புதான் நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டியுள்ளது. மேலும் பரம்பரை நகைகளுக்கும் ரசீது கேட்கிறாா்கள். இதுபோன்ற நெருக்கடியை சாமானிய மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

முன்பு இருந்ததுபோல எளிய முறையை மீண்டும் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் குரல் கொடுப்போம். தமிழ் செம்மொழி. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்டது தமிழ்மொழி.

தொல்லியல் ஆராய்ச்சியாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கீழடி ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்தபோது, அந்த அறிக்கையில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளதை காங்கிரஸ் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்மொழியின் பாரம்பரியம் குறித்து நாம்தான் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க