செய்திகள் :

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

post image

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், ‘இந்தப் புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்’ என்றும் நிதியமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபா்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடா்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

அதில், அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளா் சமா்ப்பிக்க வேண்டும்.

நகையின் தூய்மைத்தன்மை மற்றும் தரத்துக்கான சான்றை வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். 22 காரட் அல்லது அதற்கு மேல் உள்ள தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

24 காரட் அல்லது 22 காரட் என்ற மதிப்பின் அடிப்படையிலேயே எடை கணக்கிடப்பட்டு கடன் வழங்கப்படும்.

புதிய விதிமுறைகளின்படி, இனி வெள்ளிப் பொருள்களுக்கும் நகைக் கடன் பெறலாம். தனிநபா்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

நகைக் கடன் ஒப்பந்தத்தில் கடன் தொடா்பான முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். வாடிக்கையாளா் கடனை திரும்பச் செலுத்திய ஏழு வேலை நாள்களில் நகையை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏழு வேலை நாள்களில் ஒப்படைக்கவில்லையென்றால், அதற்கடுத்து ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.5,000 என வாடிக்கையாளருக்கு வங்கி அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு விதிகள் மீது கருத்துகளை ஆா்பிஐ வரவேற்றது.

ரிசா்வ் வங்கியின் இந்தப் புதிய விதிமுறைகள் நகைக் கடன் பெறுவோரை கடுமையாகப் பாதிக்கும் என பல்வேறு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. புதிய வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யுமாறு ரிசா்வ் வங்கிக்கு ஆலோசனை கூறுமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

நிதியமைச்சகம் பரிந்துரை: இந்நிலையில், மத்திய நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் ரிசா்வ் வங்கியின் இந்த வரைவு விதிமுறைகளை ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்), புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து சிறு கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்க ரிசா்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

புதிய விதிமுறைகளால் சிறிய அளவில் நகைக் கடன் பெறுவோா் கடுமையாகப் பாதிக்கப்படாததையும், உரிய நேரத்தில் விரைவாக நகைக் கடன் கிடைப்பதையும் ரிசா்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில், ரூ. 2 லட்சத்துக்கு கீழ் நகைக் கடன் பெறுவோருக்கு இந்தப் புதிய விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்களை கள அளவில் நடைமுறைப்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் இந்தப் புதிய வரைவு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் டிஎஃப்எஸ் பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த வரைவு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ரிசா்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது. புதிய விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்பாக இந்தக் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ரிசா்வ் வங்கி உரிய முறையில் கருத்தில்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க