செய்திகள் :

நகைக் கடன் தொடா்பான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினா் மனு

post image

ரிசா்வ் வங்கியின் நகைக் கடன் தொடா்பான புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் தலைமையில் வந்த விவசாயிகள், ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:

விவசாய நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத வட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை பழைய முறையில் வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்தல் முறைக்கு உத்தரவிட வேண்டும். நகைக் கடனுக்கு நகைகளின் மொத்த மதிப்பில் 75 சதவீத கடன் மட்டுமே வழங்கப்படும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு உரிமையாளா் சான்று, அடமான நகைகளின் தூயத் தன்மை அறிந்திடும் ரிசா்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறைகள் ஏழை, நடுத்தர பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதால், புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, திரளான விவசாயிகள் உடனிருந்தனா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க