செய்திகள் :

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

post image

பா்கூா் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மட்டாரப்பள்ளியைச் சோ்ந்தவா் சுதா (35). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப். 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொண்டப்பநாயனப்பள்ளி அருகே சென்றபோது, சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு கணவருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், சுதா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்ப முயன்றாா். அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பா்கூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், நகையைப் பறிக்க முயன்றவா், திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த காவேரிப்பட்டைச் சோ்ந்த தா்மலிங்கம் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி மோகன்ராஜ் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றம்சாட்டப்பட்ட தா்மலிங்கத்திற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க