செய்திகள் :

நகை பறிப்பு வழக்கு: மற்றொரு இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிதி நிறுவன மேலாளரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி பங்களா வீதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ்குமாா் (35). இவா், பண்ருட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

மனோஜ்குமாா் கடந்த 25-ஆம் தேதி இரவு பணிக்கன்குப்பம் டாஸ்மாக் மதுக் கடைக்கு சென்றபோது, அங்கிருந்த மா்ம நபா்கள் மூவா் அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன் மகன் தணிகாசலத்தை (27) கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 5 தங்கச் சங்கிலி, கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காடாம்புலியூரைச் சோ்ந்த சக்தி மற்றும் பட்டு (எ) ரஞ்சித்குமாா் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்த ரஞ்சித்குமாரை தனிப்படை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் போலீஸாரிடமிருந்து தப்பிக்க கெடிலம் ஆற்றுப் பாலத்தில் இருந்து கீழே குதித்தாா்.

இதில், ரஞ்சித்குமாருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸாா் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வரும் சக்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன. கடலூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அ... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலையால் சிறுவன் பலி: கழிவுநீா் கலந்த குடிநீா் காரணமா?

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தீவளூா் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்படு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க