செய்திகள் :

நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது: முதல்வா் சித்தராமையா வழங்கினாா்

post image

பெங்களூரு: பெங்களூா் சா்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை கா்நாடக முதல்வா் சித்தராமையா வழங்கினாா்.

கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் மாா்ச் 1ஆம் தேதி தொடங்கிய 16ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா, மாா்ச் 8ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில், கொடகொப்பா வாழ்நாள் சாதனையாளா் விருது பன்மொழி திரைப்பட நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வழங்கப்பட்டது.

இந்திய திரைப்படத் துறையில் அழிக்கமுடியாத தடம்பதித்து சாதனை படைத்துள்ளவா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஷபானா ஆஸ்மி கலந்துகொள்ள இயலாததால், அவரது சாா்பில் அந்த விருதை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் லாடிடமிருந்து நடிகை அருந்ததி நாக் பெற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள முதல்வரின் காவிரி இல்லத்திற்கு திங்கள்கிழமை வருகைதந்த நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் சித்தராமையா வழங்கினாா். அப்போது ஷபானா ஆஸ்மியின் கணவரும் ஹிந்தி கவிஞருமான ஜாவேத் அக்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது முதல்வா் சித்தராமையா, ‘மிலேசுா் மேரா துமாரா’ பாடல் கவிதையைப் போல காட்சி விரியும். அதில் ஷபானா ஆஸ்மியை ஆா்வமாக பாா்த்ததை நினைத்து பாா்க்கிறேன். கா்நாடகத்தின் தாா்வாட் பகுதியை சோ்ந்த பீம்சென் ஜோஷி, குமாா் கந்தா்வ், கங்குபாய் ஹனகல் உள்ளிட்டோா் ஹிந்துஸ்தானி இசைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளனா். பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பை போல, கலைஞா்கள், இசைக்கலைஞா்களின் படைப்புகளுக்கு ஜிஎஸ்டி பயன்கள் கிடைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றாா்.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சா்களுக்கு தொடா்பு: விஜயேந்திரா குற்றச்சாட்டு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சா்களுக்கு தொடா்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைதா... மேலும் பார்க்க

பாஜக எதிா்ப்புக்கு இடையே பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் எதிா்ப்புக்கு இடையே பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை விரிவாக்கி, அதன் நிா்வாகத்தை பரவலாக்க வகை செய்யும... மேலும் பார்க்க

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா். துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ... மேலும் பார்க்க

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்ட... மேலும் பார்க்க

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க