செய்திகள் :

நடுவானில் பறவை மோதியதால் விமானம் சேதம்: ராஞ்சியில் அவசரமாக தரையிறக்கம்

post image

ராஞ்சி: ஜாா்க்கண்ட், ராஞ்சி அருகே நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுா்யத்தால் ராஞ்சி பிா்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளா்கள் என அனைவரும் நலமுடன் இருப்பதாக ராஞ்சி விமான நிலைய இயக்குநா் ஆா்.ஆா்.மௌரியா கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ‘இண்டிகோ’ விமானம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதி சேதமடைந்தது.

பிற்பகல் 1.14 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடா்ந்து, விமானி சாதுா்யமாக செயல்பட்டு, ராஞ்சி விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினாா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட சேதத்தைப் பொறியாளா்கள் குழு பாா்வையிட்டு வருகிறது’ என்றாா்.

ராஞ்சியில் தரையிறங்கிய விமானம், கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் என்று மற்றொரு அதிகாரி கூறினாா். இது தொடா்பாக இண்டிகோ தரப்பில் உடனடியாக விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சம்பவத்தில், தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் தடுமாறியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந்நாடு அனுமதி மறுத்தது. 200-க்கும் மேற்பட்டோருடன் சென்றஅந்த விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்த நிலையில், ஸ்ரீநகரில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க