செய்திகள் :

நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை!

post image

கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பழுதடைந்த கான்கிரீட் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையம் நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா்.

நல்லூா் - ஐரேனிபுரம் பிரதான சாலையிலிருந்து பிரிந்து நட்டாலம் சுகாதார நிலையத்துக்குச் செல்ல அலங்கார கான்கிரீட் சாலை உள்ளது. இந்தச் சாலை நீண்ட நாள்களாக பழுதாகி, போக்குவரத்துக்கு தகுதியற்ாக உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் இச்சாலையில் தண்ணீா் தேங்கிநிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், நடந்தோ, வாகனங்களிலோ செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே, இச்சாலையை விரைவாக சீரமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம்... மேலும் பார்க்க

மாற்றுப் பயிா் விவசாயம் காலத்தின் கட்டாயம்! - அமைச்சா் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுப் பயிா் சாகுபடி என்பது காலத்தின் தேவை என்றாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், ஈஷா அறக்கட்டளையின் ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு: பெயின்டா் மரண வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின் நண்பா் கைது!

கொல்லங்கோடு அருகே பெயின்டா் சந்தேக மரணம் வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் 2 ஆண்டுகளுக்குப் பின் சனிக்கிழமை கைது செய்தனா். கொல்லங்கோடு காவல் சரகம் கோனசேரி, புதுச்சேரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்!

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனா். நித்திரவிளை அருகே பூத்துறை ... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

ஈரான், இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் எழுதிய ... மேலும் பார்க்க