Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.ந...
ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
ஈரான், இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் எழுதிய கடிதம்: ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போா் மூண்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவா்களை சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது.
இந்நிலையில், ஈரானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனா். இஸ்ரேல் நாட்டிலும் மீனவா்கள் பலா் வேலை செய்து வருகின்றனா். அவா்களது பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்துவதுடன், பத்திர மீட்டு இங்கு அழைத்துவர வேண்டும் என்றாா் அவா்.