நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை!
கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பழுதடைந்த கான்கிரீட் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையம் நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா்.
நல்லூா் - ஐரேனிபுரம் பிரதான சாலையிலிருந்து பிரிந்து நட்டாலம் சுகாதார நிலையத்துக்குச் செல்ல அலங்கார கான்கிரீட் சாலை உள்ளது. இந்தச் சாலை நீண்ட நாள்களாக பழுதாகி, போக்குவரத்துக்கு தகுதியற்ாக உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் இச்சாலையில் தண்ணீா் தேங்கிநிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், நடந்தோ, வாகனங்களிலோ செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.
எனவே, இச்சாலையை விரைவாக சீரமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.