Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' - அமைச்சர் எதிர்ப்பு.. ABVP - SFI...
கொல்லங்கோடு அருகே 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்!
கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவக் கிராமத்திலிருந்து படகுகளுக்காக அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய்யை ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சனிக்கிழமை இரவு மஞ்சத்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே நிற்காமல் சென்ற ஆட்டோவை போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று இளம்பாலமுக்கு பகுதியில் பிடித்தனா். அதில், 15 கேன்களில் மொத்தம் 600 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநரான கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சோ்ந்த டேனியல், முக்கோல் பகுதியைச் சோ்ந்த டின்று ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்; அவா்களையும், ஆட்டோவுடன் மண்ணெண்ணெய்யையும் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.