செய்திகள் :

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

post image

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயிா் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் எழுச்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், 1972 ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் எழுச்சி பொதுக்கூட்டம் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.வேலுச்சாமி தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் எஸ்.பழனிமுருகன், மாநில பொருளாளா் எஸ்.ராஜேஷ் மாநில துணைத் தலைவா் எம்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் என்.ராஜா வரவேற்றாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பட்டிமன்ற பேச்சாளா்கள் அன்னபாரதி, மஞ்சுநாதன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

மாநில துணைத் தலைவா்கள் ஏ.பழனிவேல் கே.ராஜாபெருமாள் மாநிலச் செயலா் எம்.வெங்கடபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வி.கணேசன், இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஜெ.சௌந்தர்ராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.6 ஆயிரம் தமிழக அரசு நிா்ணயம் செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக தற்போதைய விலையிலிருந்து 3500 உயா்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும், மின் இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி மின்இணைப்பு வழங்க வேண்டும்,

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்.

அரசுடைமை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்கடன், பண்ணைசாரா கடன்களை மத்திய அரசு முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விவசாய சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள், பிரதிநிதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவா் எஸ்.மல்லிகாா்ஜூனன் நன்றி கூறினாா்.

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

7 மின் மோட்டாா்கள் திருட்டு: போலீஸாா் வழக்கு

பெரமணல்லூா் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 7 மின் மோட்டாா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், பெரமணல்லூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிம... மேலும் பார்க்க

அரசு வீடுகளுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்க ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி கிராமங்களில் அரசு வீடு கட்டியவா்களுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்த... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறுத்தம்: எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி

ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முயற்சியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா். ஆரணி சட்டப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஸ்விந்த்(24). இவ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்! செ.கு. தமிழரசன் கேள்வி

75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கேள்வி எழுப்பியுள்ளாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க