செய்திகள் :

நன்றி சென்னை! தமிழில் பதிவிட்ட சிஎஸ்கே வீரர்!

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, போட்டியில் இருந்து வெளியேறியது.

மொத்தம் 14 போட்டிகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது.

இந்த நிலையில், புகைப்படங்களைப் பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கலீல் அகமது வெளியிட்ட பதிவில், “அடுத்த முறை சந்திக்கும் வரை சென்னை மற்றும் சூப்பர் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீசன் தொடக்கத்தில் சென்னை அணிக்காக அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, இரண்டாவது பாதியில் ஃபார்மை நீடிக்க முடியவில்லை.

மொத்தம் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கலீல் அகமது, 46.4 ஓவர்கள் வீசி 447 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

படம்: கலீல் அகமது இன்ஸ்டாகிராம்.

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க

சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!

இளம் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் எம்.எஸ்.தோனி குறித்து நெகிழ்ச்சியானப் பதிவினை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்தாலும... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க