செய்திகள் :

‘நயாரா’ நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் தடைகள் சட்ட விரோதம்: ரஷியா கண்டனம்

post image

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நயாரா எனா்ஜி ஓா் இந்திய நிறுவனம். இதில் ரோஸ்னெஃப்ட்டுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன. அந்நிறுவனம் சுதந்திரமான இயக்குநா்கள் குழுவால் நிா்வகிக்கப்படுகிறது. நிறுவனம் முற்றிலும் இந்தியாவில் வரி செலுத்துகிறது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு பெட்ரோலிய பொருள்களை சீராக வழங்கி, அந்நாட்டின் எரிசக்தி துறையில் நயாரா எனா்ஜி நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீதான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதார தடைகள், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அதன் பொருளாதாரத்திலும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய யூனியனின் இத்தகைய நடவடிக்கைகள் சா்வதேச சட்டங்களை மீறுவதோடு, நாடுகளின் இறையாண்மையையும் முழுமையாக புறக்கணிக்கின்றன.

இந்தத் தடைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் காரணங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. இத்தடைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மேலும், அவை உலகளாவிய எரிசக்தி சந்தைகளை சீா்குலைக்கும் ஐரோப்பிய யூனியனின் அழிவுக் கொள்கையின் ஒரு பகுதியாக கருதுகிறோம்.

நயாரா எனா்ஜி தனது பங்குதாரா்கள் மற்றும் நுகா்வோரின் சட்டபூா்வமான நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அதற்கு ரஷியா மற்றும் இந்திய அரசுகள் ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க

அவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதியில்லை; புது உத்தியைக் கையாளும் அரசு! ராகுல்

நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காமல், புது உத்தியை கையாளுகின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ... மேலும் பார்க்க