செய்திகள் :

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

post image

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முயற்சித்தார்.

ஆனால், முன்பே அனுமதி பெறாததால் அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் அப்பாவு நிராகரித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஒருநாள் இடைநீக்கம் செய்து அவர்களை வெளியேற்ற அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

”தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி மக்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்கின்றனர். இதனால்தான் முதலீடுகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் என தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் கொலை, கொள்ளை நிகழ்வுகளை ஊதிப் பெருசாக்கி, இரவுபகலாக பணிபுரியும் தமிழக காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணைபோகிறது.

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்று தற்போது நடைபெறுவதில்லை. தவறு செய்பவர் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் வழக்குப் பதிந்து, கைது செய்யப்படுகிறார்கள்.

சில சமயங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக மக்களிடம் வீண் புரளியைக் கிளப்பாமல் எதிர்க்கட்சித் தலைவரும், அவர் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சியினரும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழக பேரவை: அதிமுகவினர் இடைநீக்கம்; வெளியேற்ற உத்தரவு!

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க