செய்திகள் :

நவீன் பட்நாயக்கை சந்தித்து ஒடிசா முதல்வர் நலம் விசாரிப்பு

post image

புவனேஸ்வரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி நலம் விசாரித்தார்.

நவீன் நிவாஸ் எனப்படும் பட்நாயக்கின் இல்லத்தில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வர் இருந்துள்ளார். நவீன் நிவாஸுக்கு முதல்வர் மோகன் சரண் செல்லும் இரண்டாவது முறை இதுவாகும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூனில், தனது பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை வழங்குவதற்காக நவீன் பட்நாயக்கை அவர் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் மோகன் சரண், “எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது புவனேஸ்வர் இல்லத்தில் சந்தித்து உடல்நிலைப் பற்றி விசாரித்தேன்.

அவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ ஜெகநாதரிடம் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நவீனுக்கு கை கொடுக்கும் மற்றும் அவரோடு உரையாடும் இரண்டு புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் - அண்ணாமலை

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிற்கு (78), நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு அண்மையில் வீடு திரும்பினார்.

Odisha Chief Minister Mohan Charan Majhi on Saturday called on Leader of Opposition (LoP) and BJD president Naveen Patnaik at his house and enquired about his health.

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது. இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க

எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது. இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோத... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க