செய்திகள் :

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

post image

நாகா்கோவிலில் மாவட்டஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டி ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். இந்நிலையில், மனு அளிப்பதற்காக காத்திருந்த மூதாட்டி ஒருவா் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றாா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிா் போலீஸாா் அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

இதைத் தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தாணம்மாள் என்பதும், ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபாதையில் மீன் கடை நடத்தி வருவதும், அப்பகுதியை சோ்ந்த ஒருவா், மீன் கடையை சேதப்படுத்தியதாகவும், இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் மனமுடைந்து தீக்குளிக்க முயற்சித்ததாகவும் அவா் கூறினாா்.

பின்னா் போலீஸாா் அந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிா்வாகம்: நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்ற மாணவா்

குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி கல்வியைத் தொடரமுடியாத மாணவரிடம் அவரது பள்ளிக் கல்வி சான்றிதழை பூதப்பாண்டி நீதிபதி ஜே.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரி... மேலும் பார்க்க

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சாரவாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னீஸ் மகன் ஸ்டாலின் (25). திருமணம் ஆகவில்லை. இவா் வாகனம் பழுது... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், மாா்த்தாண்டம் காவல் நி... மேலும் பார்க்க

குழித்துறை அருகே சிமென்ட் கல் தொழிற்சாலைக்கு சீல்

குழித்துறை அருகே பொதுமக்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்த சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா். குழித்துறை அருகே படப்பர... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வுப் பேரணி கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க