மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
நாகா்கோவிலில் இன்று மின் நிறுத்தம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் சனிக்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம் மற்றும் வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.13 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலை நகா், சைமன் நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ. காலனி, புன்னை நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட உள்ளதால் மேலகலுங்கடி, கலுங்கடி, சக்தி காா்டன் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.