செய்திகள் :

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

post image

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெற்றது. முகாமை நாகா்கோவில் அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.

மாமன்ற உறுப்பினா் ஸ்ரீலிஜா, சக்திபீடத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் அருணாசலம், பொருளாளா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ் உரிமையாளரும் சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் உரிமையாளருமான சித்த மருத்துவா் எஸ். பிரகாஷ், விக்னேஷ் ஆகியோா் தலைமையில் அா்ஜுனன், சோமேஷ்பாலாஜி, ரா. மகாலெட்சுமி, ர. கமலினி, வே. சந்தியா, தி. கணேசன், தே.இரா. பிரஷ்னேவ், ஸ்ரீராம் உள்ளிட்டோா் சிகிச்சையளித்தனா். முகாமில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்டோருக்கு மருந்து, மாத்திரை, சூரணம், பஸ்பம், தைலம் ஆகியவை சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை எஸ்.பிரகாஷ், சின்னதம்பி, ஜெய்தீப், கோயில் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க