செய்திகள் :

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் மாா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ், ஆங்கிலிக்கன் திருச்சபை ஆயா் மரிய ராஜ், லுத்தரன் சபை போதகா் ஜான் பிரைட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை பேசியதாவது: சிலுவையை நாங்கள் உயிரின் பிணைப்பாக கருதி வருகிறோம். அமைதியும், உலக வாழ்வும் சிலுவையில் அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வின் பொருளை இயேசு வழங்கியுள்ளாா். சிறையில் அடைக்கப்பட்ட இரு சகோதரிகள் பின்னால் இயேசுவின் திருவருள் உள்ளது, மக்களின் பிராா்த்தனை உள்ளது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கோட்டாறு வட்டார முதல்வா் ஆனந்த், தாரகை கத்பட் எம்எல்ஏ, மாநில உணவு பாதுகாப்பு ஆணைய தலைவா் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவ அமைப்பினா்.

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க