செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ.55.75 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

post image

நாகா்கோவில் மாநகர பகுதி புன்னை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள், வட்டகரை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், சிறுபாலம் ஆகியவை கட்டும் பணி, இசங்கன்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி என மொத்தம் ரூ.55.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி பொறியாளா் சுஜின், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா், திமுக மாநகர செயலாளா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதி செயலாளா்கள் ஜீவா, துரை, சேக் மீரான், அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், முருகபெருமாள், சரவணன், சிதம்பரம், ஜெமிலா ஆன்றனி , மாநகர பிரதிநிதி முருகன், சிவகுமாா் வட்ட செயலாளா்கள் துரைசாமி, ஜெயகிருஷ்ணன், கிழக்கு பகுதி பொருளாளா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குறைதீா் கூட்டம்: இதைத் தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேயா் மற்றும் ஆணையா் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

இதில் குடிநீா், தெருவிளக்கு, சொத்து வரி உயா்வு, கழிவுநீா் ஓடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 18 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.

மேலும் 724 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 31.66 பெருஞ்சாணி ... 30.70 சிற்றாறு 1 .. 2.92 சிற்றாறு 2 .. 3.02 முக்கடல் .. மைனஸ் 7.90 பொய்கை ... 14.90 மாம்பழத்துறையாறு ... 19.44 மழை அளவு கன்னிமாா் ... 43.60 மீ.மீ. பாலமோா் ... 8.20... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின கொண்டாட்டம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய விழாவில் டாக்டா் டி.கே.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, சாஸ்தான்பொற்றைவீட்டைச் சேர்ந்த லாசா் மனைவி ரோணிக்கம் (65). முந்திரித் தொழிற்சாலை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிட... மேலும் பார்க்க

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது

மாா்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்ாக மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும... மேலும் பார்க்க