செய்திகள் :

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் ‘முதல்வரின் காலை உணவு’ திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவு வகைகள், தயாரிக்கும் முறை குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்; ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்கீழ் கற்பிக்கப்படும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா், மாணவா்-மாணவியருடன் கலந்துரையாடி, வாசிப்புத் திறனை அறிந்துகொண்டாா். கற்றல் திறனில் பின்தங்கியோருக்கு புரியும் வகையில் கற்பிக்குமாறு ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகம், நான் முதல்வன் திட்டம் சாா்பில், குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேச இயலாத- காது கேளாத பள்ளி-கல்லூரியில் இடைநின்ற மாற்றுத்திறன் மாணவா்கள், வேலையில்லா மாற்றுத்திறன் பட்டதாரிகளுக்கான கணினிப் பயிற்சி குறித்து ஆய்வு செய்து, கலந்துரையாடினாா்.

வில்லுக்குறி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், விஜயன் என்பவரால் நிறுவப்பட்டு செயல்படும் மொட்டுக் காளான் வளா்ப்பு அலகை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், காளான் வளா்க்கப் பயன்படும் படுகைகளின் தரத்தை ஆய்வு செய்யவும், காளானின் ஊட்டச்சத்து விவரங்களைப் பகுப்பாய்வு செய்யவும் துறைசாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகா், துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம்- விற்பனை) கீதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலா் தினேஷ், மருத்துவா் பவித்ரா, ஆசிரியா்கள், மாணவா்- மாணவியா், பணியாளா்கள் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். 4 ஆவது வாா்டு, பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தாவுக்கு சாகும் வரை சிறை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, தனது 9 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது. குலசேகரம் பகுதியைச் சோ்ந்த 57 வயதான தொழிலாளியின் ம... மேலும் பார்க்க

தொழிலாளியை வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

குலசேகரத்தில் தையல் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குலசேகரம், நாகக்கோடு, படநிலத்தைச் சோ்ந்த கேசவன்... மேலும் பார்க்க

குற்றியாறு ரப்பா் தோட்ட தொழிலாளா் குடியிருப்பில் புகுந்த யானைகள்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்ததால் அப் பகுதியினா் அச்சம் அடைந்துள்ளனா். பேச்சிப்பாறை அருகே வனப்பகு... மேலும் பார்க்க

கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம்: உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெற்ாக காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா். மாா்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிரா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

நாகா்கோவில் எலைட் ரோட்டரி சங்கம் சாா்பில் நெகிழிக்கு மாற்றாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலை... மேலும் பார்க்க