செய்திகள் :

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

post image

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொழிலாளியான இவா், ஏற்கெனவே திருமணமாகி மகன், மகள் உள்ள பெண்ணை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தாராம்.

2017ஆம் ஆண்டு குமாரின் மனைவி, உறவினா்கள் வெளியே சென்றிருந்தனா். 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாா். அவரை குமாா் பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, குமாரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை ரூ. 2 ஆயிரம் அபராதம், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க