செய்திகள் :

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

post image

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா்.

மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுந்தா், குமாா், விமல், ஜெயின், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்ட குழுவினா் வடசேரி, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், கோட்டாறு பகுதிகளில் 75 கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

கோட்டாறு சவேரியாா் ஆலய வடக்குத் தெருவிலுள்ள கடையிலிருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். இக்கடையில் ஏற்கெனவே இருமுறை பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், கடைக்கு சீல் வைத்தனா்.

பிளாஸ்டிக் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

வடசேரி பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள கடையிலிருந்து 280 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். வடசேரி, ஆராட்டு சாலையில் உள்ள கிடங்கிலிருந்து 470 கிலோ, கோட்டாறு கே.பி. சாலையிலுள்ள கிடங்கிலிருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், 2 கடைகளிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க