கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி:
நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தேரோட்டம் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெற உள்ளதால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.