செய்திகள் :

நாகையில் மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் மாா்ச் 15 காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 8 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், நா்சிங் தோ்ச்சி மற்றும் தையல் கலை பயிற்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் பங்கேற்று பயன்பெறலாம். விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்களது கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 04365-252701, 6381732378 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்புகொள்ளலாம். இதில் வேலைவாய்ப்பு பெறும் மனுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.

தனியாா் கல்லூரியில் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

நாகப்பட்டினம்: நாகையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து 2,700 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனா். நாகை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, நாகை... மேலும் பார்க்க

நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் அருகே நீலப்பாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் த... மேலும் பார்க்க

வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மக தேரோட்டம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யேஸ்வரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்... மேலும் பார்க்க

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு

நாகப்பட்டினம்: மகளிா் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க