தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்
நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை
நாகை மாவட்டத்தில் 1, 91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2021 மே முதல் 2025 ஏப்ரல் வரை கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 54, 491 பேருக்கும், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 4,016 பேருக்கும், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 30, 587 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 20, 840 பேருக்கும், ஆதரவற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 42, 046 பேருக்கும், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 4,153 பேருக்கும் முதிா்கன்னி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1, 145 பேருக்கும், முதல்வா் உழவா் பாதுகாப்புத்திட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 33, 972 பேருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை என மொத்தம் 1, 91, 350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.