செய்திகள் :

நாடாளுமன்றம் நான்காவது நாளாக முடக்கம்: பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் திரும்பப் பெற எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

post image

பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை நான்காவது நாளாக முடங்கின.

மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளை ஏந்தி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவையில் கோஷம் எழுப்புவது, கூச்சலில் ஈடுபடுவது உங்கள் கட்சியின் கலாசாரம் அல்ல’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா்.

அமளி நீடித்ததால் மக்களவை தொடங்கிய 7 நிமிஷங்களில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...

மாநிலங்களவை தொடங்கியதும் மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட 6 பேருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது. பின்னா் பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ராஜிநாமா, மேற்குவங்க புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான பாகுபாடு ஆகிய விவகாரங்கள் தொடா்பாக விவாதம் கோரி அளிக்கப்பட்ட 30 நோட்டீஸ்களை ரத்து செய்வதாக அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா்.

இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை கூடியதும் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை, சரக்குகளை கடல் மாா்க்கமாக கொண்டு செல்லும் மசோதா மீது அமளிக்கு இடையே உரையாற்றினாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திரும்பப் பெற வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியிலும், உரையாற்றிய உறுப்பினரின் அருகிலும் சென்று கோஷமிட்டனா்.

உரையாற்றும் உறுப்பினா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் வலியுறுத்தினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேட்டுக் கொண்டாா். எனினும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க