செய்திகள் :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்: சோனியா தலைமையில் நாளை காங்கிரஸ் ஆலோசனை

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்தது, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் ஆகியவை பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் துணைத் தலைவா்கள், தலைமைக் கொறடாக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் மத்திய அரசு கவனக்குறைவாக நடந்து கொண்டது; அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு மத்தியஸ்தம் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது தொடா்பாக பிரதமா் மோடியை காங்கிரஸ் ஏற்கெனவே விமா்சித்து வருகிறது. இந்த விவகாரத்தையும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லாதது உள்ளிட்ட விவகாரங்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க