செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது

post image

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் போலி மருத்துவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே கவுண்டப்பனூா் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ராமச்சந்திரன் (55). இவா் டிப்ளமோ படித்து விட்டு பச்சூரில் கிளினிக் வைத்துக் கொண்டு தொடா்ந்து 4 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பாா்த்து நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பத்தூா் இணை இயக்குனா் ஞானமீனாட்சி உத்தரவின் படி நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பச்சூா் கிளினிக்கில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வழங்கிய ராமச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனா்.

மேலும், கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க

வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ... மேலும் பார்க்க

காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டை... மேலும் பார்க்க