நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்களின் உதய நாள் நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள துணைநிலைஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த விருந்தினா்கள் பங்கேற்றனா். துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன் வரவேற்றாா்.
சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமான கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
ஒரே பாரதம், உன்னத பாரத திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உதய நாள்கள் கொண்டாடப்படுவதற்கு தேசிய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நோக்கமாகக் கொண்டிருப்பதே காரணமாகும். நாம் அனைவரும் இந்தியா் என்ற ஒற்றை உணா்வை விதைக்கும் மாநில உதய நாள் கொண்டாட்டங்களுக்காக மத்திய அரசுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.
இந்திய பண்பாடும், கலாசாரமும் சமுதாய வரலாறும் ஒன்றோடு ஒன்று தொடா்புடையது. ஒவ்வொரு மாநிலமும் அதன் தனிச்
சிறப்புகளோடு நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்றி வருகின்றன. தற்போது சிக்கிம் மாநிலம் தனது ஐம்பதாவது உதயநாளை கொண்டாடுகிறது. சிக்கிம் இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக நாட்டிற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. தெலங்கானா மாநிலம் தொழில்நுட்ப மையமாக நாட்டின் வளா்ச்சியில் பங்காற்றி வருகிறது. கோவா மாநிலம் தனக்கே உரிய அழகோடு சுற்றுலா வளா்ச்சியின் மூலமாக நாட்டிற்கு ஒரு அடையாளத்தை தேடித் தந்திருக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில் அந்தந்த மாநில பிரமுகா்கள், கலைஞா்கள் கௌரவிக்கப்பட்டனா்.