செய்திகள் :

நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது: லாலு பிரசாத்

post image

நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தெரிவித்தாா்.

பிகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை நடைப்பயணத்தில் பங்கேற்கச் சென்றபோது பாட்னாவில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

நாட்டில் இப்போது நிலவி வரும் மோசமான சூழ்நிலைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். முன்பு அவசரநிலை காலகட்டத்தில் நாட்டில் மிகமோசமான சூழ்நிலை நிலவியது. இப்போதைய நிலைமை அதைவிடவும் மோசமாக உள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தியும் நம்முடன் இணைந்து போராடுவது நல்ல விஷயம்.

நாட்டின் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வாக்குரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்த மிகவும் முக்கியமான உரிமை.

அந்த உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயலுகின்றன. அது நிகழ்ந்துவிடாமல் நாம் தடுத்தாக வேண்டும் என்றாா்.

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து ப... மேலும் பார்க்க

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க